Pages

Wednesday 14 January 2015

விஜய்யின் புலி பெருத்தொகைக்கு விலைபோனது...

கத்தி படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக பிரம்மாண்ட செட் போட்டு நடைபெற்று வருகிறது.

சில படங்களின் வேலைகள் முடிவடைந்த பிறகும் விலைபோகாது.ஆனால், தற்போது விஜய்யின் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், சென்னை, செங்கல்பட்டு, வட , தென் ஆற்காடு ஏரியாக்களின் விநியோக உரிமைகள் பெரிய தொகை கொடுத்து ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் உரிமையாளர் முரளியிடம் இருந்து கைப்பற்றியிருக்கிறாராம்.

0 comments

Post a Comment