தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் திரிஷா, சமீபத்தில் தனக்கும், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம்
நடக்கப்போவதாக தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டார்.
அதன்படி, வருகிற ஜனவரி 23-ந் தேதி திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இருவீட்டார் முன்னிலையில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நிச்சயதார்த்ததுக்கு பரிசாக வருண்மணியன், திரிஷாவுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளாராம்.
ரூ.7 கோடி மதிப்புள்ள ஜெட் பிளாக் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் என்ற காரை திரிஷாவுக்கு நிச்சயதார்த்த பரிசாக வருண்மணியன் வழங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
நிச்சயதார்த்த தேதி முடிவாகிள்ள நிலையில், திருமணத்திற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. நிச்சயதார்த்த விழாவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகும் நடிப்புக்கு முழுக்கு போடுவதில்லை என்று திரிஷா ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடக்கப்போவதாக தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டார்.
அதன்படி, வருகிற ஜனவரி 23-ந் தேதி திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இருவீட்டார் முன்னிலையில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நிச்சயதார்த்ததுக்கு பரிசாக வருண்மணியன், திரிஷாவுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளாராம்.
ரூ.7 கோடி மதிப்புள்ள ஜெட் பிளாக் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் என்ற காரை திரிஷாவுக்கு நிச்சயதார்த்த பரிசாக வருண்மணியன் வழங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
நிச்சயதார்த்த தேதி முடிவாகிள்ள நிலையில், திருமணத்திற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. நிச்சயதார்த்த விழாவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகும் நடிப்புக்கு முழுக்கு போடுவதில்லை என்று திரிஷா ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments
Post a Comment