Pages

Tuesday 13 January 2015

நடிகர் விஜய்யின் திடீர் விவாகரத்து முடிவு. திரையுலகில் பரபரப்பு:

துனியா என்ற கன்னட படத்தில் நடித்ததால் கன்னட திரையுலகில் துனியா விஜய் என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்பவர் கடந்த வருடம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். அவருடைய இந்த முடிவை கன்னட திரையுலகினர் வரவேற்றுள்ளனர்.

துனியா விஜய்க்கும் நாகரத்னா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துனியா விஜய் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவடையும் நிலையில் இருந்தபோது நேற்று துனியா விஜய் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் இருதரப்பிலும் உள்ள பெரியவர்களின் மத்தியஸ்தம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னுடைய விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் புதிய மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கன்னட திரையுலகினர் துனியா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். துனியா விஜய்யின் இந்த முடிவுக்கு தமிழ்த்திரையுலகில் இளையதளபதி விஜய் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

0 comments

Post a Comment