Pages

Sunday 18 January 2015

‘என்னை அறிந்தால்’ எனக்காக வேணாம் அவர்களுக்காக ஹிட் கொடுக்க வேண்டும் – அஜீத்

சில காலங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்த ஏ. எம். இரத்னம், ஒரு சில படங்கள் கொடுத்த தோல்வியால் துவண்டு போயிருந்தார். தனது தோல்வியினை ஈடுகெட்ட அஜீத்தை அணுகிய அவர், ஆரம்பம் படத்திற்கான தயாரிப்பினைப் பெற்றார்.
ஆரம்பம் நல்ல வசூல் கொடுத்தது. ஆனாலும் அவரின் கடன் தீர்ந்தபாடில்லை. இதனால்தான் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தையும் இவரே தயாரிக்கிறார். இப்படம் வெற்றி பெற்றால் இவரின் பெருங்கால பிரச்சனை அடங்கும் என அஜீத் நினைக்கிறார்.

அத்துடன் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் சமீபகாலமாக குறிப்பிடும்படியான வெற்றி எதிலும் பதிவுசெய்யப்படவில்லை. இவருக்காகவும் படம் நல்ல வசூல் கொடுக்க வேண்டும் என்று அஜீத கூறியுள்ளதாக கோலிவுட் செய்திகள் கூறுகின்றன. இவற்றை மனதில் வைத்துதான் கும்பலோடு படத்தை இறக்காமல் தனியாக இறக்க முடிவு செய்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது. இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 29 இல் தியேட்டர்களில் வெளிவருவது உறுதி என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

0 comments

Post a Comment