Pages

Monday 12 January 2015

அஜீத்துக்கும் இரண்டு கிளைமாக்ஸ் வைத்த கவுதம் மேனன்.

பொதுவாக ஒரு படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் வைப்பது கவுதம் மேனனின் ஸ்டைல். காக்க காக்க' படத்தில் திரையில் திரையிடும்போது ஜோதிகா மரணம் அடைவதுபோல கிளைமாக்ஸை வைத்திருந்த கவுதம் மேனன், டிவிடி பதிப்பில் ஜோதிகா உயிர் பிழைப்பது போல கிளைமாக்ஸ் வைத்திருப்பார். அதேபோல் வேட்டையாடு விளையாடு படத்திலும் ஜோதிகா மரணம் அடைவது போலவும், உயிருடன் திரும்புவது போலவும் கிளைமாக்ஸ் வைத்திருந்தார்.


சிம்பு த்ரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயா படத்திலும் திரைக்குள் திரையிடும் படத்தில் காதல் ஜோடிகள் சேருவது போலவும், பின்னர் உண்மையில் பிரிவது போலவும் காட்சிகள் வைத்திருப்பார். தற்போது அஜீத் நடிப்பில் இயக்கி வரும் 'என்னை அறிந்தால்' படத்திலும் கவுதம் மேனன் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை கவுதம் மேனன் தயார் செய்து வைத்திருந்தாலும், அவர் ஒரு கிளைமாக்ஸை மட்டுமே படத்திற்கு பயன்படுத்த உள்ளதாகவும், ஒரு கிளைமாக்ஸை சில நாட்கள் கழித்து யூடியூப் இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் மற்றும் பலர் நடிப்பில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள 'என்னை அறிந்தால்' ஜனவரி 29 முதல் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment